எட்டூருக்கு மணக்கும் மீன் குழம்பு!

தேவையான பொருள்கள்:

பொடிமீன் - 1 கிலோ

புளி - எலுமிச்சம் பழ உருண்டை அளவு

குழம்பு மிளகாய்த் தூள் - 4 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 100 கிராம்

வெங்காயம் - 100 கிராம்

பச்சை மிளகாய் - 2

தேங்காய் - 1/2 மூடி

எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு லிட்டர் தண்ணீரில் புளியைக் கரைத்து மிளகாய்த் தூள், உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்த பிறகு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு, சிவக்க வதக்க வேண்டும். பின்னர் புளிக் கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிவந்த பிறகு, மீன்களைப் போட வேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து விழுதாக அரைக்கப்பட்ட தேங்காயைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கினால் மணக்க மணக்க மீன் குழம்பு ரெடி!

No comments:

Post a Comment